சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடி, இன்று முதல் சுற்றிவளைப்பு
சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடி, இன்று (27) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இன்றைய தினம் -27- கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சிறுவர்களை பணிக்கமர்த்துவதற்காக அழைத்துவரும் தரகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment