Header Ads



சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடி, இன்று முதல் சுற்றிவளைப்பு


சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடி, இன்று (27) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் -27- கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சிறுவர்களை பணிக்கமர்த்துவதற்காக அழைத்துவரும் தரகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.