Header Ads



பாலியல் துஷ்பிரேயாகிகளிடம் இருந்து, பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கோரிக்கை


பாலியல் துஷ்பிரேயாகிகளிடம் இருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாத்து கொள்வதற்காக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல தாய்மாரிடமும் கோரியுள்ளது

அந்த அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 16 பேர் கைது செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.