Header Ads



வீதி விபத்தில் ஆசிரியை பலி, கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயம்


(ஹஸ்பர் ஏ ஹலீம்) 

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் 25.07.2021 ஞாயிறு அன்று மதியமளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளதுடன் அவரது கணவர் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான மகன் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின்மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை பாலையூற்று சென்லூட்ஸ் வித்தியாலய ஆசிரியை திருமதி. பாமதி ஞானவேல் (49) என்பவரே உயிரிழந்துள்ளார்.  மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


No comments

Powered by Blogger.