Header Ads



தேவையான தண்டனையை ரஞ்சன் அனுபவித்து விட்டார் - பொது மன்னிப்பு வழங்குமாறு கலைஞர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கலைஞர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ரஞ்சன் ராமநாயக்கவுடன் சினிமா துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். 

சட்டத்தின் முன் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து பிழை என்றாலும் சமூகத்தில் அவர் கூறியது சரி என, நிரூபிக்கப்பட்டுள்ளதென நடிகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

லஞ்ச-ஊழல்கள் குறித்தே ரஞ்சன் ராமநாயக்க விமர்சனங்களை முன்வைத்ததாகவும் அதற்கு தேவையான சிறை தண்டனையை அவர் அனுபவித்து விட்டதாகவும் ஜீவன் குமாரதுங்க கூறியுள்ளார். 

அதனால் கலைஞர்களாக நோக்கி கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.