Header Ads



மாணவர்களின் மீது கருணை கொண்டு, ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிடவேண்டும் - நாமல்


மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிடவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் அரசாங்கமே, பொலிஸாரோ பாதிக்கப்படவில்லை என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் தங்கள் போராட்டங்களில் வெற்றிபெறுவதற்கும் தொழிற்சங்கங்களிற்கு உரிமையுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்றால், அதனை உண்மையான தொழிற்சங்க போராட்டம் என அழைக்க முடியாது என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாணவர்களிற்கு கல்வி புகட்டுவது தேசிய போராட்டம் என தெரிவித்துள்ள அவர் ஆசிரியர்கள் அவ்வாறான பொறுப்பை கைவிடகூடாது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.