Header Ads



ரிசாத் பதியுதீன் சுகம் பெறவும், விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் பிரார்த்தனை


- நூருள் ஹுதா உமர் -

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி இறைவனிடம் பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகராட்சி உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாபின் ஏற்பட்டில் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. 

கடந்த பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்திருக்கும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அண்மையில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் சுகமாகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் கல்முனை பட்டின ஜூம்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார். 

இந்த துஆ பிராத்தனை நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஜூனைதின் மான்குட்டி, கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் கலீல் முஸ்தபா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும்  சுகாதார வழிமுறைகளை பேணி கலந்து கொண்டனர். 


1 comment:

  1. 15 வயது பெண்பிள்ளையை வேலைக்கு வைத்து நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்கததெரியாதவனுக்கும் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமைகளை நடத்தியது பற்றி தெரியாது என கூறும் இவர்களால் வெளியில் உள்ள மக்கள் படும் துயரங்களை எப்படி தெரியப்போகிறது. இவருக்கு நிச்சயம் அந்த ஆண்டவன் கொடுத்த தண்டனைதான் இது என்று ஏற்றுக்கொள்ள முடியாத மூட மனிதவர்கள் உள்ளவரை இவ்வாறான ஈனச்செயல் செயல் செய்து அரச பணத்தை கொள்ளையடிப்பவர்கள் உருவாகிக்கொண்டே இருப்பா◌ார்கள். நல்லது செய்தால் அது ஆண்வன் செய்த அருள்என்கிறீர்கள் கெட்டவனுக்கு அந்த ஆண்டவனிடம் மன்றாடுகின்றீர்கள் உங்களை நினைத்து வெட்கப்படுவதா அல்லது ஆண்டவனை நினைத்து வெட்கப்படுவதா என்று தெரியவில்லை.குற்றம் செய்பனுக்கு ஆண்டவன் அருள்கொடுப்பானா?

    ReplyDelete

Powered by Blogger.