Header Ads



புத்தளம் நகர சபை தலைவராக ரபீக், போட்டியிலிருந்து புஷ்பகுமார விலகல், பாயிஸின் வெற்றிடத்திற்கு ஜௌபர் மரிக்கார் நியமனம் (வீடியோ)



புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த M.S.M. ரபீக் இன்று -01- தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

புத்தளம் நகர சபையின் புதிய தலைவர் பதவிக்கு சபையின் பதில் தலைவர் R.A.S.புஷ்பகுமார மற்றும் M.S.M. ரபீக் ஆகியோர் போட்டியிடவிருந்தனர்.

தலைவரைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், போட்டியிலிருந்து விலகுவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் R.A.S.புஷ்பகுமார அறிவித்தார்.

இதனையடுத்து, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் M.S.M. ரபீக் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.