Header Ads



இலங்கை சிங்கத்துக்கு, பிரித்தானிய அல்பா கொரோனா இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது


தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள தோர் என்ற சிங்கத்துக்கு, பிரித்தானியாவில் பரவும் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்றி இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

றாகம மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்திய பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

முதற்கட்ட பரிசோதனையில் குறித்த சிங்கத்துக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குறித்து சிங்கத்துக்கு அல்பா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக, றாகம மருத்துவ பீட நுண்ணுயிரியல் துறை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.