Header Ads



யாழ்ப்பாணத்தில் துண்டிக்கப்பட்டரின் கையை, பொருத்திய வைத்தியர்கள் - 6 மணித்தியாலமாக சத்திர சிகிச்சை


யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி துண்டிக்கப்பட்ட ஒருவரின் கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன், மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் ஆகியோரின் கூட்டு சேவையினால் கை துண்டிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு 8.30 முதல் 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.