Header Ads



இலங்கைக்கு கடத்த தயாராகவிருந்த 2.6 தொன் மஞ்சள் தூத்துக்குடியில் பிடிபட்டது


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சிப்பிக்குளம் கடற்பகுதியில், இலங்கைக்கு கடத்த தயாராகவிருந்த சுமார் 2.6 டன் உலர் மஞ்சள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 

87 மூடைகளில் பொதியிடப்பட்டிருந்த இந்த உலர் மஞ்சள், மீன்பிடி படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.

காவல்துறையின் கியூ பிரிவினர்  இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது, சந்தேகத்துக்கிடமான மூடைகளை, சிலர் படகில் ஏற்றிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை கைதுசெய்த காவல்துறையினர், மஞ்சள் மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் குளத்தூர், கீழவைப்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 31 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.