Header Ads



சீனா இலங்கைக்கு வழங்கிய சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயருகிறது


எதிர்வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. 

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன.

இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கப்பெறும் ஆகக்கூடியளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.

எதிர்வரும் ஆகஸ்ட் 4 – 8 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சமாக உயர்வடையவுள்ளது.

இவற்றில் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 27 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.