Header Ads



கொரோனா தடுப்பூசியின் 2 டோஸையும் செலுத்தி, PCR நெகடிவ் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு நாடு பூராகவும் சுற்றலாம்


கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் அவர்களுக்கு 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பிசிஆர் பரிசோதனைகளை அனுமதிக்கப்பட்ட ஏதாவது பரிசோதனை நிலையத்தின் ஊடாக செய்து, பிசிஆர் முடிவுகளை helloagain@srilanka.travel என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.