Header Ads



மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு 19 ஆம் திகதி வரை நீட்டிப்பு


தற்போது நடைமுறையில் உள்ள  மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை  அறிவித்துள்ளார்.

 நாட்டில் கோவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய  பயணக் கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.