Header Ads



நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் - ஒகஸ்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களே மீதமாக இருக்கும்


வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிப்பொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நிதிச்செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் நிறைவடையும் போது, வெளிநாட்டு ஒதுக்கம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் 2002 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த நேரிடும்.

1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களே மீதமாக இருக்கும்.

அந்த நிதியை கொண்டே இறக்குமதி செயற்பாடுகள், வங்கி நடவடிக்கைகள், எரிப்பொருள் இறக்குமதி ஆகிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

எனவே நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.