Header Ads



15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு


கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பிக்கு அதிகளவில் பணத்தை கொடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த சிறுமிக்காக பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் விசேட மருத்துவ நிபுணர், பிரதேச சபை ஒன்றின் தலைவர், சில பொலிஸ் அதிகாரிகள், பாடகர், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக மக்கள் பிரதிநிதி ஒருவரும் கைது செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

1 comment:

  1. பௌத்த மதத்திலும் சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய அவசியம ஏற்பட்டுடுள்ளதுபோல் தோன்றுகின்றது. பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவது தொடர்ந்தேச்சியாக நடைபெற்று வருகின்றது. பௌத்தத்தில் மத குருமார் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி முறை உண்டோ இல்லையோ தெரியாது. ஆயினும் அவரகளின் ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவரகளுக்கு திருமணம் மிக முக்கியம். பாவம்தானே! அவரகளும் எத்தனை நாட்களுக்குத்தான் தாக்குப் பிடிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.