அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு 12 ஆம் திகதிமுதல் கொரோனா தடுப்பூசி
ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார்.
நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை விரைவாக ஏற்றுவதற்கு ஜனாதிபதியின் பூரன ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.
Post a Comment