Header Ads



முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும் - நீண்ட நாட்களின் பின் ஊடகங்களின் முன் தோன்றிய முஜிபுர் ரஹ்மான் Mp போர்க்கொடி


கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

இன்று நாடு நாள்தோறும் குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.  நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி ஏராளமான வாக்குகளைப் பெற்றார்.அது போதாது என்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெருன்பான்மையும் பெற்றார். அதுவும் போதாது என்று 19 ஆவது திருத்தத்தை திருத்தி 20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெருன்பான்மையுடன் நிறைவேற்றினார். இன்று ஒரு ஜனாதிபதியும் அரசாங்கமும் அதிகாரத்தை நிறைய பெற்றுள்ளன. இது அனைத்தையும் அடைந்துள்ளது.  நாட்டை அபிவிருத்தி செய்தாக கூறினாலும் நடந்த எதுவும் இல்லை, மக்களுக்கு நிவாரணம் அளித்து மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் கோவிட் பரவல் கட்டுப்பாட்டை மேற்கொள்ளாது இன்று நோயாளிகள் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் மக்கள்  நிரம்பியுள்ளனர். முழு கோவிட் ஆளுகையும் தோல்வியடைந்துள்ளது. பொருளாதார நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ஆரம்பம் முதல் கூறினாலும் அத்தியவசியப் பெருட்களின் விலையை கடலடுப்படுத்த முடியாத தலைவராக மாறியுள்ளார்.சகலவற்றிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கத்தில்  அனைவருக்கும் ஒரு தீர்வாக ரூ .5000 வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்ததாகத் தெரிகிறது. தற்போது அரசாங்கம் அதை குறிப்பிட்ட வர்க்கத்திற்கு சுருக்கி சமுர்தி பெறுநர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளது.இவற்றுக்கு மேலதிகமாக இன்று எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது.95 ரக பெட்ரோல் ரூ .23 ஆக உயர்த்தியுள்ளது ரூ .23. சகலவற்றுக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்துமர வன்னம் டீசல் விலையையும் உயர்த்தியுள்ளது.7 ரூபாவால் அதிகரித்துள்ளது.இது பொது மக்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எரிபொருள் ஆகும். அரசாங்கம் மண்ணெண்ணெய் விலையை ரூ .7 ஆக உயர்த்தியுள்ளது, மேலும் அதைப் பயன்படுத்துபவர்கள் அதிகளவிலான எண்ணிக்கையில் உள்ளனர்.

மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போல் இந்த அரசாங்கம் மக்களை நடத்துகிறது.

குறிப்பாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உலகின் கோவிட் நிலைமை காரணமாக, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 25 முதல் 19 டொலர்கள் வரை வீழ்ச்சியடைவதைக் கண்டோம்.அப்போது மிகக் குறைவாக இருந்தபோது, ​​அப்போதைய பெற்றோலியத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர எண்ணெய்  சலுகை டின்மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றிலிருந்து வழங்கப்படும் என்று கூறினார். பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன வந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு விலை உறுதிப்படுத்தும் அறக்கட்டளை அமைக்கப்படும் என்று கூறினார். இன்று, அந்த அறக்கட்டளையின்  இருப்பிடம் எங்கே? அதிலுள்ள நிவாரன நிதியை யார் செலவு செய்தார்கள்?, அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

தான் அமைச்சராக பதிவியேற்று இரு வருடங்களுக்குள் விலை அதிகரிப்பை ஏற்ப்படுத்த மாட்டேன் என கம்மன்பிலா முன் வருவதாக உறுதியளித்தனர். எதிர்க் கட்சியில் இருக்கும் போது 90 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று கூறியவருக்கு அமைச்சராகியதன் பின்னர் ஏன் அந்த விலைக்கு கொடுக்க முடியாது என்று கேள்வி எழுப்புகிறோம்.இரண்டு வருடங்களுக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க மாட்டேன் என்று அவர் கூறினார். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது 90 ரூபாய்க்கு எரிபொருள் வழங்க முடியும் என்று கூறினார். இன்று என்ன நடந்துள்ளது.இன்று 852 ரூபா வீதமே துறைமுகத்திலிருந்து பெறுகின்றனர்,அவ்வாறு பெற்றதற்கு 23 ரூபா வரியை இனைத்து அரசாங்கம் இன்னும் 62 ரூபாய் இலாபம் ஈட்டுகிறது. இன்று அராங்கத்திடம் நிதி இல்லை. காரணம் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்த வியாபார நண்பர்களுக்கு உதவும் பெருட்டு வரிச் சலுகை வழங்கியமையால் அரச வருவாய் வெகுவாக குறைந்தது. இன்று அரசிடம் பணம் இல்லை. இப்போது அரசாங்கத்திடம் பணம் இல்லை, எனவே நாட்டின் அனைத்து சுமைகளையும் மக்கள் சுமக்க வேண்டிய நிலையை அரசாங்கமே ஏற்ப்படுத்தியுள்ளது.


பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இருப்பதாக அரசாங்கத்தின் பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறுகிறார், ஆனால் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இலாபம் ஈட்டுவதாக கூறுகிறார்.அரசாங்கம்  ரூ .650 மில்லியனை கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டும் என்று தலைவர் கூறுகிறார்.நஷ்டத்திற்கான காரணம் கூட்டுத்தாபனத்துடன் அரசாங்கம் ஏற்ப்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணித்ததே பிரதான காரணம்.இவ்வாறு இருக்கும் போது ஏன் மக்கள் மீது வரி விதிக்க முயன்றனர். ராஜபக்சர்களிடமிருந்து ஒருபோதும் நிவாரணம் எதிர்பார்க்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். இது ஒரு ஆமையை ஓடச் செல்வது போன்றது. உலக எண்ணெய் விலைகள் குறையும் போது எண்ணெய் விலையை அதிகரிக்கும் ஒரு அரசாங்கம் இன்று உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் மூன்று ரூபாயைக் குறைத்து மீண்டும் இரண்டு ரூபாவாக அதிகரித்தபோது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு மிதி வண்டியில் சமூகமளித்ததை பார்த்தோம். இன்று என்ன அர்த்தம் 23 ரூபாயால் அதிகரித்துள்ளது.எப்படி வீதிகளில்  போகப்போகிறார்கள்? மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தான் செல்ல வேண்டும்.வீதியில் செல்ல முடியாது. நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீதான

மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.எரிபொருள் விலையை அதிகரித்து விட்டு, அமைச்சரை பதவி விலக்கிப் பயண் இல்லை. முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.முழு அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ .5,000 சகல மக்களுக்கும் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறேன்.

கொரோனாவின் காரணமாக நிறைய நிவாரணம் வழங்குவோம் என்று அரசாங்கம் கூறியது.இதுவரை எதையும் செய்ய முடியவில்லை. அரிசிக்கு 10 க்கும் மேற்ப்பட்ட வர்த்தமானிகளை வெளியிட்டது.சீனி உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு வர்த்தமானியை வெளியிட்டாலும் அதன் பிரகாரம் நுகர்வோர் பயனயடையவில்லை. வர்த்தமானிகளை யாரும் பெருட்படுத்துவதில்லை. உரத்தை இலவசமாக வழங்குவதாக கூறினர்.இன்று அது பணத்திற்குக் கூட வீங்குவதற்கு இல்லை.விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் நிலைக்கு வந்துள்ளனர்.சௌபாக்கியத்தின் தொலைநோக்கை இரண்டு வருடங்களாக பார்த்தால் சேர் பெய்ல் என்பதை காட்டுகிறது.மீண்டும் ஜீ எஸ் பி பிலஸ் இழக்கப்படும் அபாயமுள்ளது.பெருளாதாரம் முற்றிலுமாக சரிந்துள்ளது.சௌபாக்கியத்தின் தொலைநோக்கு இன்று துர்ப்பாக்கியத்தின் தொலைநோக்கா மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.