Header Ads



கொலையாளி விடுதலை, நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது, போசன் தினத்தன்று அநீதி


கொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளார் என துமிந்தசில்வாவின் விடுதலை குறித்து கொலை செய்யப்பட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மனைவி தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்த தனது சீற்றத்தை அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

கொலை செய்தார் என நீதிமன்றம் தண்டனை வழங்கிய துமிந்தசில்வாவை  அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையை சுமண பிரேமசந்திர கடுமையாக கண்டித்துள்ளார்.

கொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளார் – நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, உயர்நீதிமன்றங்களின் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை  அவமரியாதை செய்வதன் மூலம் நீதித்துறையை மதிக்காத நாடாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் புனிதமான போசன் தினத்தன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.