Header Ads



புதுடெல்லி ரோஹின்யா அகதிகள் முகாமில் தீ, குடிசைகள் எரிந்து நாசம் - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் களத்தில் இறங்கி உதவி

டெல்லியின்  புறநகர் காஞ்சன்குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ரோஹின்யா அகதிகள் முகாமில் நேற்று 12.06.2021 நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 75 குடிசைகள் முற்றிலும் தீக்கிரையான துயரம் நிகழ்ந்துள்ளது..

சம்பவம் கேள்விப்பட்ட நள்ளிரவே ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ன் சேவைப் பிரிவு எஸ் பி எஃப் வாலண்டியர்கள் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீயணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்..

இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பழம், பிஸ்கட் பொருட்கள் வழங்கியதுடன் குடிசைகள் சீரமைப்பு முயற்சிகளையும் துவங்கியுள்ளனர்.

-  Colochel Azeem




No comments

Powered by Blogger.