Header Ads



வெலிகம ஹெரோயின் கடத்தல் பின்னணியில் 'ஹரக் கட்டா'


வெலிகம கடற்பரப்பில், கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 219 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (14) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன், இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேகநபர்கள் கோட்டேகொடை பிரதேசத்தில் வைத்து நேற்று (14) கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த போதைப்பொருள் கடத்தல், துபாயில் வசிக்கும் 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தகவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.