Header Ads



நீர்கொழும்பு அல் அம்ரா ஹோட்டலின் பாராட்டத்தக்க சேவை


(எம்.இஸட். சாஜஹான்)

சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பில் பாராட்டத்தக்க வகையில் சமூக சேவையை ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.

 நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அம்ரா ஹோட்டலின்  உரிமையாளர் எம்.எச்.எம்.ஷியான், நான்காயிரம் சமைத்த  உணவு பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் வழங்கினார்.

அவரது ஹோட்டலில் இந்த உணவு சமைக்கப்பட்டது.   கடந்த இரண்டு மூன்று தினங்களாக அவருடன் பல இளைஞர்கள், நண்பர்கள் இதற்காக கடுமையாக உழைத்து உள்ளனர்.

அவர் நேற்றைய தினமும் 1200 உணவு பார்சல்களை வழங்கியிருக்கிறார்.

சமைக்கப்பட்ட உணவுகள் பொதி செய்யப்பட்டு  நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஆப்தீன் மாவத்தை, நாத்தாண்டிய பொலிஸ் பிரிவில் தும்மோதர    ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.