புத்தளம் நகரசபை தவிசாளராக ரபீக்
வெற்றிடமாக இருக்கும் புத்தளம் நகர சபைக்கான தவிசாளராக உறுப்பினர் ரபீக்கை நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
புத்தளம் நகர சபையில் தவிசாளராக பதவி வகித்த கே.ஏ.பாயிஸ், விபத்தொன்றில் மரணமடைந்தார்
அவருடைய வெற்றிடத்துக்கே ரபீக் நியமிக்கப்படவுள்ளது. புத்தளம் நகர சபையின் தவிசாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவது சம்பந்தமாக அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களோடும், கட்சியின் புத்தளம் நகர சபையின் உறுப்பினர்களோடும் கலந்தாலோசனையொன்றை கட்சியின் தலைமையும், செயலாளரும் இணைந்து நடத்தியிருந்தது. அதனடிப்படையியே இத்தீர்மானம் எட்டப்படுள்ளது என அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment