Header Ads



சிங்கப்பூருக்கு செல்லும் இலங்கை ஆமைகளின் உடல் மாதிரிகள்


எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பரவலுக்கு உள்ளான பின்னர் பதிவாகும் ஆமைகளின் மரணங்களுக்கான காரணத்தை ஆராய்வதற்காக அவற்றின் உடல் மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும்  (18) பாணந்துறை, நீர்கொழும்பு - போருதொட்ட மற்றும் வாத்துவ கடற்கரைகளில் உயிரிழந்த ஆமைகளின் உடல்கள் கரையொதுங்கின

இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவிப்பதற்காக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கப்பலினால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக வருகை தந்துள்ள மூன்று வெளிநாட்டு நிபுணர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.