Header Ads



இலங்கைத் தூதுவரின் தந்தைக்கு ஓமானில் ஜனாஸாத் தொழுகை


அண்மையில் வபாத்தான ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர்அஜ்வத் அவர்களின் தந்தை ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் மர்ஹூம் ஓமர் லெப்பை ஆசிரியர் அவர்களுக்கு ஓமான் நாட்டின் தலைநகர்  மஸ்கட்டிலுள்ள “உம்முல் குறா”ஜூம்மா பள்ளிவாயலில் கடந்த வெள்ளிக்கிழமை மறைவான ஜனாஸாவுக்கான தொழுகை நடாத்தப்பட்டது. 

பள்ளிவாயலின் பேஷ் இமாம் சுலைமான் ஹக்கீம் அவர்களால் நடாத்தப்பட்ட ஜனாஸாத் தோழுகையில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களும் இலங்கை மற்றும் ஓமான் நாட்டினர் பலரும் கலந்து கொண்டனர். 

ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டோர் இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகை தந்து தமது அனுதாபங்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

அண்மையில் காலஞ்சென்ற ஓய்வுபெற்ற முன்னால் அதிபர் அல்ஹாஜ் மர்ஹூம் ஓமர் லெவ்வை ஆசிரியர் அவர்கள் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்களின் அன்புத் தந்தையும், அகில இலங்கை சமாதான நீதவானும் மற்றும் அரச அதிகாரம் பெற்ற ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் (Sworn Translator). இலங்கை ஆயுர்வேத சங்கத்தின் உறுப்பினரான இவர் கொழும்பு வாழைத்தோட்ட மிஹிந்து மாவத்தை மகா வித்தியாலயம், காத்தான்குடி, காங்கேயனோடை மற்றும் பாலமுனை அரச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகவும் மற்றும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். அன்னாரின் ஜனாஸா காத்தான்குடி மெத்தைப்பள்ளி வாயல் மையவாடியில் 16.06.2021 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. (மனாஸ் ஹுசைன்)

No comments

Powered by Blogger.