கொரோனாக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பிய யுவதி, திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மரணம்
- செ. தி. பெருமாள் -
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு, வீட்டுக்குத் திரும்பியிருந்த 29 வயதான யுவதியொருவர், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியாவில் இடம் பெற்றுள்ளது.
மஸ்கெலியா சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட புதுத்தோட்ட பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றியிருந்த நிலையில், அந்த யுவதி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நுவரெலியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிகிச்சைகளை முடித்துகொண்டு, வீடு திரும்பிவிட்டார்.எனினும், நேற்று (04) மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. யுவதியை வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதற்கு
வாகனங்களை தேடியுள்ளனர். எனினும், வாகனம் கிடைக்காமையால், லொறி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றனர்.
செல்லும் வழியிலேயே அந்த யுவதி மரணமடைந்துவிட்டார். அவரது சடலம், மஸ்கெலியா வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி நரேந்திர குமார், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரணமடைந்த யுவதிக்கு பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.
Post a Comment