Header Ads



புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு புதிய அதிபர்


புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அநுராதபுரம் இக்கிரிகொல்லாவவையைச் சேர்ந்த ஐ. ஏ. நஜீம் (49) (BA -Pol Spe, MA, PGDE,PGDEM) SLPS-1 சென்ற 17.06.2021 அன்று தமது கடமைகளை போறுப்பேற்றுக் கொண்டார். 

பிரதி வருடமும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அரச சேவைகள் ஆணைக்குழு மூலம் நிரப்புவதற்கு கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோருவதுண்டு. அதன் பிரகாரம் விண்ணப்பித்தவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் நஜீம் இக்கிரிகொல்லாவ முஸ்லிம் வித்தியாலய அதிபராக பணியாற்றியதோடு, இறுதியாக வடமத்திய மாகாண கல்விப் பணிமனையில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்குப் பொறுப்பாகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.