Header Ads



இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது - முகுது மகா­வி­காரதி­பதி


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கிழக்கு மாகா­ணத்தில் தொல்­பொருள் சின்­னங்கள் உள்­ள­டங்­கிய காணி­களை கைய­கப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இனந்­தெ­ரி­யாத சக்­திகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான காணி­களை இச் சக்­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக நிரந்­த­ர­மான திட்­ட­மொன்று வகுக்­கப்­பட வேண்­டு­மென முகுது மகா­வி­காரை அதி­பதி வர­கா­பொல இந்­திர சிறி தேரர் தெரி­வித்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் அழிக்­கப்­பட்டு வரும் தொல்­பொருள் பிர­தே­சங்கள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘அருகம் குடா கரை­யோ­ரத்தில் உள்ள வன­பா­து­காப்பு திணைக்­களம் மற்றும்  கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான காணிகள் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான காணிகள் என்­பன காணி அதி­கா­ரிகள் எனக் கூறிக்­கொள்ளும் அர­சியல் அதி­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய நபர்கள் அரச அதி­கா­ரி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து இந்த காணி கொள்­ளையில் சூட்­ச­க­மான முறையில் ஈடு­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் உள்­ளன எனவும் தேரர் தெரி­வித்தார்.

கொவிட்19 தொற்­றினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நாட்டில் பயணக் கட்­டுப்­பா­டுகள் அமுலில் உள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் குடா­கல்லி, அரு­கம்பை, பச­ரச்­சேனை, கடொ­லான உட்­பட்ட காணிகள் துப்­பு­ரவு செய்­யப்­பட்ட வரு­கி­றது. மரங்கள் வெட்­டப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் குறித்து தொல்­பொருள் திணைக்­களம் மற்றும் வன­பா­து­காப்பு திணைக்­களம் என்­ப­ன­வற்­றுக்கு ஏற்­க­னவே முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.  ஆனால் முறைப்­பா­டுகள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது. தொல்­பொ­ருட்கள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்றால் இந் நிலை­மையை கவ­னத்தில் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து வணக்க ஸ்தலங்­க­ளுக்கும் ஒவ்வோர் பன்­சலை நிர்­மா­ணிக்­கப்­பட வேண்­டு­மென நான் சிபா­ரிசு செய்­கிறேன்.

அனைத்து தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்கி தொல்­பொருள் வல­ய­மாக பெய­ரிட்டு எல்லை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். எல்லைக் கற்கள் நடப்­ப­ட­வேண்டும். பாது­காக்­கப்­பட வேண்­டிய அனைத்து இடங்­க­ளிலும் இடி விழுந்தால் கூட அறி­யாத வகையில் உறங்­கிக்­கொண்­டி­ருக்கும் அதி­கா­ரிகள் சேவையில் இருந்து அகற்­றப்­பட வேண்டும். செயற்­திறன் மிக்க அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பும் இக்­கோ­ரிக்கை அர­சாங்­கத்­திடம் முன் வைக்­கப்­பட்­டது.

முறை­யற்ற செயற்­பா­டுகள் தொடர்­பாக அதி­கா­ரிகள் பொலிஸில் முறை­யிட்­டாலும் அதனால் எது­வித பல­னு­மில்லை. பொலிஸார் இவ்­வாறு அச­மந்தப் போக்­காக செயற்­ப­டக்­கூ­டாது. பிர­தே­சங்­களின் சூழ்­நி­லைக்­கேற்ப அதி­கா­ரி­களை செயற்­ப­டுத்­தும் ­அ­ர­சியல் சக்­திகள் இருக்­கின்­றன. இயங்கி வருகின்றன. அவர்களுக்கு எதிராக பேசினால் தங்கள் பதவி நட்சத்திரங்கள் இழக்கப்படுவோம், இடமாற்றம் செய்யப்படுவோம் என்ற பயம் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மதிப்புள்ள காணிகளை இரகசியமாக அழிக்கும் சக்திகள் தலையெடுக்கலாம்’ என்றார்.- Vidivelli

3 comments:

  1. இன்னொருமுறை உங்களுடைய இனவாத அட்டூழியங்கள் ஆரம்பிக்கப்படுமாயிருந்தால் சர்வதேச ரீதியில் அது இலங்கையின் அழிவின் கடைசி நிலையாக தான் இருக்கும்

    ReplyDelete
  2. சண்டை பிடித்துக்கொண்டு இருங்கள். நாளை சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.