Header Ads



விமலுக்கு இழைக்கபட்ட அநீதியை ஏற்க முடியாது, போரட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தயாராக இல்லை - வாசுதேவ


அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்கு கீழிருந்த பொஸ்போட் நிறுவனத்தை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கீழ் கொண்டு வந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிலரது தேவை, கோரிக்கை, அவசியம், அளவீடுகளுக்கு அமைய இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகிறன என்றார்.

“எனினும், இவ்வாறு சிறு கட்சிகளின் அமைச்சர்களுக்கும் கட்சிகளுக்கும் திட்டமிட்டே இழைக்கப்படும் அநீதிகளுக்கு  எதிராக  போரட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்றார்.

எனினும், இலாபமடைந்த பின்னர் இந்த நிறுவனத்தை கைமாற்றியமைக் குறித்து எதிர்வரும் நாள்களிள் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.