உயிரிழந்து கரையொதுங்கும், கடல்வாழ் உயிரினங்கள் (படங்கள்)
நாட்டின் பல பகுதிகளில் கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் இன்று 06.06.2021 கரையொதுங்கியுள்ளன.
இன்று 6 ஆமைகளும், ஒரு டொல்பினும் உயிரிழந்தநிலையில் கரையொதுங்கியுள்ளன.
கப்பல் தீ பற்றி, அதன் கழிவுகள் கடல் நீரில் கலந்தமையால், இவ்வாறு கடல்வாழ் உயிரிழந்தனவா என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் இல்லாத போதும், கடல்வாழ் உயிரினங்கள் திடீரென உயிரிழந்து கரையொதுங்குவது குறித்து, விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment