Header Ads



சஜித் - சம்பிக்க இடையே மோதலா..? நடத்தையே தீர்மானிக்குமென அறிவிப்பு


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எதிர்காலமானது, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேதமாசவின் நடத்தை மற்றும் வேறு சில காரணங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படுமென, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அப்போதைய சந்தர்பத்தில் இருந்த சிறந்த  ஒரேயொரு மாற்றுவழி சஜித் என்றும் அதனாலேயே நாம் அதற்கேற்றவாறு செயற்பட்டோம் என தெரிவித்த அவர், எனினும்,   ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பயணம் அவரது செயற்பாடு மற்றும் ஏனைய காரணங்களுக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்றார்.

1 comment:

Powered by Blogger.