Header Ads



பொருத்தமற்ற நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்தி விட்டார்கள் – கர்தினால்


பொருத்தமற்ற நேரத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகள், எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து போன்ற நிலைமைகளில் நாட்டில் எரிபொருளுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளமை ஏற்புடைதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எரிபொருள் விலையேற்றத்தினால் பாரியளவு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.