Header Ads



பசிலின் பாராளுமன்ற பிரவேசம் குறித்து கலந்துரையாடல்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று (27) மாலை கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோனின், தெஹிவளையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 6ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.