பிடிபட்ட புள்ளி சுறாவை, மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில், நேற்றைய தினம் (16) மாலை, மீனவர்களின் கரைவலையில் 'புள்ளி சுறா' ஒன்று அகப்பட்டுள்ளது.
மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுடைய வலையில் குறித்த புள்ளி சுறா சிக்குண்டுள்ளது.
இதையடுத்து, அந்த புள்ளி சுறா மீனை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விடுவித்துள்ளனர்.
Post a Comment