Header Ads



'குடு உக்குவா' பிடிபட்டான்


கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு உக்குவா' எனப்படும் ரணசிங்க ஆரச்சிகே லால் ரோஹித என்ற நபர் களனி திஸ்ஸகம, வேரகொடெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 25 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் 16 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (16) மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.