Header Ads



நான் ஏன் மீண்டும், பாராளுமன்றம்​ செல்கிறேன் தெரியுமா..?


“நான் ஏன் மீண்டும் பாராளுமன்றத்துக்குச்​ செல்வதாக பலர் கேட்டனர். உண்மையில் எனக்கு பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை” எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, “பாரிய அழுத்தங்கள் வந்தன. நாட்டில் கொரேனா தொற்று தீவிரமடைந்துள்ளது. எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நினைத்ததை விட அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் குரல் எழுப்ப வேண்டும் என உணர்ந்ததால், பாராளுமன்றத்துக்கு வர தீர்மானித்தேன்” என்று கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று (18) மாலை வெளியாகியது.

இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரண்டாவதாக இலங்கையின் அரசியல் நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளதென தெரிவித்த ரணில், அரசாங்கத்தின் புகழ் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதை தான் கண்டதில்லை. இதற்கான மாற்று வழியை பராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இன்னும் முன்வைக்கவில்லை. இ்வ்வாறான அரசியல் பின்னணி மற்றும் நிலையை தான் இதற்குமுன்னர் கண்டதில்லை என்றார்.

அரசியலும் குழப்பம், நாடும் குழப்பத்தில் அதனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்பது தனக்கும் குழப்பமாக உள்ளதெனத் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டவுடன் பொருளாதார முகாமைத்துவத்துக்கே தான் முன்னுரிமை வழங்கியதாக ரணில் தெரிவித்தார்.

“ஆனால், கோட்டாபாய ராஜபக்‌ஷ நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர், வருமான வரியை நீக்கினார். உண்மையில் எமது வருமானம் குறைவடைந்தது.

வரி குறைப்பு செய்ததால் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமென தெரிவித்தனர். ஆனால், அது நடக்கவில்லை. நாட்டில் வருமானம் குறைவடைந்துள்ளதால் பணத்தை அச்சிட ஆரம்பித்துள்ளனர். பணம் அச்சிடப்படுவதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் இதன் பிரதிபலனே எரிபொருள் விலை அதிகரிப்புக்குக் காரணம்” என்றார் ரணில்.

“பல நாடுகள் கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அவ்வாறு சந்தித்த நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை செயற்படுத்துவதால் சர்வதேச நாணய நிதியம் அந்த நாடுகளுக்கு கடன் வழங்கியுள்ளது” என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நான் சுருக்கமாக அதன் காரணத்தைச் சொல்கின்றேன். கேளுங்கள். ராஐபக்ஸ சமாகமவின் ஊத்தைகளையும் கில்லாட்டங்களையும் சர்வதேச உலகத்துக்கு மறைக்கவும் சர்வதேச ரீதியாக இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கள்ள ராஜதந்திர ரீதியாக தீர்வு காணவும், பஸிருக்கு செயலாளர் பணியாற்றவும் கடைசியில் அமைச்சரவையில் ஒரு அமைச்சுப் பதவியுடன் காலை நீட்டவும் தான் நான் இம்முறை் இந்த நாட்டு மக்கள் அனைவரும் என்னையும் எனது கட்சியையும் ஒதுக்கித் தள்ளி என்னை ஊத்தை வாழியில் வீசியபோதும் மேற்படி காரணங்களை சிறப்பாக செய்து முடிப்பதாக நடிப்பதற்குத் தான் நான் பாராளுமன்றத்தில் எனது கட்சிக்கு இலவசமாகக் கிடைத்த சீட்டுக்கு பாராளுமன்றம் நுழைகின்றேன். வேறு கேள்விகள் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். என்னை எதிர்பார்த்து பாராளுமன்றத்தில் காத்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.