Header Ads



காரணமின்றி கொழும்புக்குள் பிரவேசித்த 976 வாகனங்கள்


எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் நேற்று (07) காலை 6.30 முதல் 9.30 வரையில் மொத்தமாக 78,022 வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளன.

அவற்றில் 20,307 வாகனங்கள் முதலீட்டு மற்றும் வங்கி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும்.

அத்துடன் 9,710 வாகனங்கள் சுகாதார பணியாளர்களில் பயணித்த வாகனங்களாகும்.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 1028 பேர் கைது செய்யப்பட்டனர்

இந்த தகவல்களை காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.