Header Ads



8 ஆம் திகதிமுதல் இலங்கையர்களுக்கு, இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது


இம்மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 

ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இன்று, நாளை (06) மற்றும் நாளை மறுநாள் (07) லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.