Header Ads



இலங்கை உள்ளிட்ட 7 நாடுகள், பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைப்பு


கோவிட் பெருந்தொற்று ஆபத்து காணப்படும் சிகப்பு பட்டியலைக் கொண்டு நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நோய்த் தொற்று பரவக்கூடிய ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் பிரித்தானிய அரசாங்கம், இலங்கையின் பெயரை இணைத்துக் கொண்டுள்ளது.

சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கோவிட் பரிசோதனை நடாத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.