Header Ads



கொழும்பில் திங்கட்கிழமை 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா 2 ஆம் தடுப்பூசி


அஸ்ட்ராசெனெகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டாம் தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தடுப்பு வைத்தியர் தினுகா குருகே இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பான விபரம் குறுந்தகவல்களாக கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த குறுந்தகவல் கிடைக்க பெறாதவர்கள் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திற்கு பிரவேசிக்கக்கூடாது என்றும் கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தடுப்பு வைத்தியர் தினுகா குருகே அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.