Header Ads



கொரோனா ஊசி 5,000 ரூபாயக்கு விற்பனை, என பேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது


கொரோனா தடுப்பூசியை 5,000 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளர் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலவான -தபஸ்ஸரகந்த வித்தியாலயத்தில் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, மேற்படி சந்தேகநபர் அதனைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தடுப்பூசிகள் 5,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கலவான பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏ.ஏ.எம்.பாயிஸ்


No comments

Powered by Blogger.