Header Ads



நகைகளை கொள்ளையிட கல்லறையை, தோண்டிய 2 பேர் கைது


எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு மயானத்தில், கல்லறையை தோண்டிய இருவர, நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரிக்காடு மயானத்தில் கல்லறைகளை இருவர் தோண்டி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் 

விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகளுடன் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில்

இருந்து நகைகளை எடுக்கவே, கல்லறையை தோண்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்களால் அகழப்பட்ட கல்லறைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.