நிர்மாணப்பணி இடம்பெரும் அதிவேக நெடுஞ்சாலையில், சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் - 2 பேர் பலி
நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் குருணாகல் - கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு ஏழு மணியளவில் இந்த பாதையின் ஊடாக குருணாகலை நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெறும் போது குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர்.
அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில்இ சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.
Post a Comment