Header Ads



கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலயத்தில் 244 கொரானா தொற்றாளர்கள், 5 மரணங்கள் - Dr தௌபீக்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 244 கொரானா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் 5 கொவிட் 19 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். 

கொரோனா தொற்று நிலவரம் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். இறுதியாக நேற்றைய (28)நிலவரப் படி இத் தகவலை தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் 56 தொற்றாளர்களும்,மட்டக்களப்பு 127, அம்பாறை 12,கல்முனை 49 என கொவிட்19 தொற்றாளர்கள் நேற்று (28)வரை  24 மணி நேரத்திற்குள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்  மட்டக்களப்பில் நால்வரும் அம்பாறையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் மொத்தமாக இம் மூன்றாம் அலையில் 10734 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மொத்தமாக 239 கொவிட் மரணங்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியதாகவும் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.