Header Ads



இன்று ஞாயிறு 22 கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் - மொத்தம் 437 ஆக உயர்வு


- நஜிமிலாஹி - 

மொத்தமாக 463 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றும் (06.06.2021)


 22 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் Jaffna Muslim க்கு தெரிவித்தார். 

இதன்படி 437 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 10 கிறிஸ்தவ மரணங்களும் 10 இந்து மரணங்களும் 04 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு  மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இலங்கையில் அனைத்து முஸ்லிம் மரணங்களும் கொரோணா மரணங்கள்தான் போல. அரசாங்கம் நல்ல சம்பாதிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.