Header Ads



ஹிஜாசுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்க 2 மௌலவிகளுக்கு அழுத்தம் - நீதிமன்றத்திலும் முறைப்பாடு


மனிதஉரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு தங்களிற்கு அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இரு மௌலவிகள் தமது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

சட்டத்தரணிக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு இரண்டு மௌலவிகளுக்கும் அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என தெரிவித்து சட்டத்தரணி எரிக்பாலசூரிய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இரு மௌலவிகளுக்கும் சட்டத்தரணியை தெரியாது என தனது மனுவில் தெரிவித்துள்ள சட்டத்தரணி அல் சுஹிரியா மத்ரசாவில் இரு மௌலவிகளும் தீவிரவாதபோதனையில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். Thinakkural

1 comment:

  1. சமூக தலைமைகள் தான் அப்படி இருக்க சமய தலைமைகள் சகரான் போன்று இருக்க நினைத்து கூட பார்க்க கூடாது. (தற்போதய அந்நிய சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மக்களை ஏமாற்றி ஏதாவது ஒரு வகையில் அநியாயத்துக்கு சம்பந்தப்பட வைத்து கூத்து பார்த்து கொண்டு இருக்கிறது )

    ReplyDelete

Powered by Blogger.