Header Ads



1,500 கிலோ நெய் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்டது


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,500 கிலோ நெய் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்டது

விளக்கேற்றும் எண்ணெய் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட நெய் அடங்கிய 100 கேன்களை கொண்ட கொள்கலன் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கேன்களில் 1500 கிலோ நெய் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 2.8 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்கலன் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதில் 1,600 கேன்கள் ஓட்ஸ் மற்றும் விளக்கேற்றும் எண்ணெய் இருப்பதாக இறக்கமதியாளர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 1.3 மில்லியன் ரூபா  வரிவருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.