Header Ads



வெளிநாடுகளில் 142 இலங்கையர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு - 4,800 பேர் பாதிப்பு


வௌிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர்களில் 4,800 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் அவர்களில் 4,600 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றவர்கள் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.