Header Ads



அதிகாலை வேளையில் இலங்கைக்கு வந்த 10 லட்சம் சீன தடுப்பூசி மருந்துகள்


சீனா உற்பத்தி செய்யும் சைனோபார்ம்  கோவிட்  தடுப்பூசி மருந்து இன்று (06) அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

10 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி தொகையானத இலங்கைக்கு ஒரே தடவையில் கொண்டு வரப்பட்டுள்ள பெருந்தொகையான தடுப்பூசி மருந்துகளாகும். கொண்டு வரப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மருந்தில் ஒரு தொகை இரண்டாவது தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதுடன் மீதமுள்ள தொகை மேலும் சில மாவட்டங்களில் முதலாவது தடுப்பூசிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். ஷ

கிடைக்க பெற்றுள்ள 10 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விதம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.