"புதியவகைக் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர் 10 நாள்களுக்குள் உயிரிழக்கும் நிலைமை" - Dr சுதர்ஷினி
நாட்டில் இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவதற்கும் இன்னும் இரு வாரங்கள் அல்லது மூன்று வாரங்கள் செல்லலாமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 10 நாள்களுக்குள் உயிரிழக்கும் நிலைமைக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment