Header Ads



Zoom ஊடாக ஆராதனை, நடத்திய மதபோதகருக்கு எச்சரிக்கை


Zoom தொழிநுட்பத்தின் ஊடாக மதபோதகர் ஒருவர் வெல்லம்பிட்டியில் உள்ள வீடொன்றில் நடத்திய ஆராதனையில் கலந்துகொள்வதற்காக சென்ற பெண் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கும் அவருடைய கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆராதனையில் கலந்துகொண்ட 6 குடும்பத்தை சேர்ந்த 14 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Zoom தொழிநுட்பத்தின் ஊடாக ஆராதனை நடத்திய மதபோதகர் எச்சரிக்கப்பட்ட அதேவேளை, மேலதிக விசாரணைக்காக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னிலையாகுமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.